MARC காட்சி

Back
நடுகல் தலைப்பலி வீரன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a நடுகல் தலைப்பலி வீரன்
300 : _ _ |a நடுகல்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a நடுகல் போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக அமைக்கப்படுவதாகும். இது வீரக்கல் (Hero Stone) அல்லது நினைவுக்கல் (Memorial Stone) என வழங்கப்படும். இறந்துபட்ட வீரனின் உருவத்தை அவன் செய்த வீரதீரச் செயலைக் காட்டும் சிற்பமாகச் செதுக்கி அவனது பெயரையும், சிறப்பையும் கல்லெழுத்துகளில் பொறித்து வைப்பர். இவ்வாறான நடுகற்களில் வீரன் தன் தலையைத் தானே வாளால் அரிந்து கொள்வது போல உள்ள சிற்பங்களும் காணப்படுகின்றன. இது தலைப்பலி எனப்படும் நவகண்ட சிற்பங்களாகும். இது தன் தலைவன் அல்லது குடிகளின், மக்களின் நலன் வேண்டி வீரன் தன் தலையை அரிந்து கொற்றவை, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடலாகும். இதனை கலிங்கத்துப்பரணி, தக்கயாக பரணி போன்ற போர் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இவ்வாறாக செயற்கரிய செய்யும் வீரர்களுக்கு நவகண்ட சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் வராகர் குகையில் அமைந்துள்ள மகிஷமர்த்தினியின் புடைப்புச் சிற்பத் தொகுதியில் தலைப்பலி கொடுக்கும் வீரனின் உருவம் இடம் பெற்றுள்ளது. முற்காலச் சோழர் கோயில்களில் வடபுறம் அமைந்துள்ள துர்க்கை அல்லது மகிஷாசுரமர்த்தினி கோட்டங்களின் இருபுறமும் இந்த தலைப்பலி வீரர்களின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணேசுவர மடத்தில் மலையைச் சுற்றிலும் தலைப்பலி சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இச்சிற்பம் பெண்ணேசுவரமடம் கோயிலின் முன்பாக உள்ளது. இதில் வீரன் ஒருவன் வலது கையில் உள்ள வாளை நிலத்தில் குத்திட்டு ஊன்றியும், இடது கையில் உள்ள நீண்ட வாளால் தன் தலையை அரிந்தவாறும் நிற்கிறான். வீரர்களுக்கேயுரிய இடைக்கட்டோடு கூடிய அரையாடை தொடை வரை அணிந்த நிலையில் இரு கால்களையும் பக்கவாட்டில் தளர்வாக வைத்த நிலையிலும், உடலை நேராக வைத்தவாறும் உள்ளான். இடைக்கட்டு ஆடையின் முடிச்சு வலதுபுறத்தில் உள்ளது. கழுத்து, கைகளில் அணிகள் உள்ளன.
653 : _ _ |a தலைப்பலி, நடுகல், நடுகல் வீரன், கிருஷ்ணகிரி நடுகற்கள், பெண்ணேசுவர மடம், வீரக்கல், நினைவுக் கல், நவகண்டம்
710 : _ _ |a முனைவர் கோ. சசிகலா
752 : _ _ |a பெண்ணேசுவர மடம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பெண்ணேசுவர மடம் |d கிருஷ்ணகிரி |f பையூர் பற்று
905 : _ _ |a கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
914 : _ _ |a 12.39301965
915 : _ _ |a 78.24379742
995 : _ _ |a TVA_SCL_000291
barcode : TVA_SCL_000291
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000291_பெண்ணேசுவர-மடம்_நடுகல்-தலைப்பலி-வீரன்-001.jpg